கண்தோஷம் நீக்கிய ஈசர்:
அக்காலத்தில் ஊருக்கு ஊர் தேவரடியார் இருந்தனர். ஒவ்வொரு கோவிலிலும் இறைத்தொண்டு ஆற்றினர். இன்றைய திருச்சி மாவட்டம் திருநெடுங்களம் அன்றைய கவிரநாட்டுக்குள் இருந்தது. இந்நாட்டின் கீழேயே மலையடிப்பட்டியும் இருந்தது. திருநெடுங்களத்தில் இருந்த தேவரடியார் பெண் ஒருவர், பூச்சிக்குடியை சேர்ந்த ஆவுடையத்தேவர் என்பவரிடம் தொடர்பில் இருந்தார். அப்பெண்ணிடம் அப்பகுதியில் இருந்த பிராமணர் ஒருவரும் இருந்தார். இதைகேள்விபட்டு ஆத்திரப்பட்ட ஆவுடையத்தேவர் அப்பெண்ணையும், அந்த பிராமணனையும் கொன்றுவிட்டு, மலையடிப்பட்டிக்கு தப்பிச்சென்று விடுகிறார். இக்கொலை பாவத்தால் அவருக்கு கண்பார்வை போய்விடுகிறது. அச்சமயம் முத்தரைய மன்னன் எழுப்பிய வாகீசர் எனும் சிவனை மனதில் எண்ணி, தன்னுடைய வயலில் ஒருபகுதியை வாகீசருக்கு தருவதாய் வேண்டிக்கொள்கிறார். அதிசயமாய் அவருக்கு பார்வை கிடைத்துவிடுகிறது. எனவே தான் நேர்ந்து கொண்டபடி தன்னுடைய வயலில் ஒருபகுதி வாகீசருக்கு அளித்துவிடுகிறார். இந்த வயலுக்கு எவரேனும் தீங்கு ஏற்படுத்தினால் அவர் கங்கைகரையிலே காராம்பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவார் என்று எழுதியும் வைத்துள்ளார். இச்சாசனம் மலைய்டிப்பட்டி குடைவரை கோவிலில் உள்ளது.



அருமையான பதிவு
ReplyDeleteநன்றி
Delete