நின்றசீர் நெடுமாறன் கல்வெட்டு:
இவரின் காலம் கி.பி(640-690) முழுமையாக ஐம்பது ஆண்டுகாலம் ஆட்சி செலுத்தியுள்ளார். சீனப்பயணியான யுவான்சுவாங் தன் பயணக்குறிப்பில் அரிகேசிபாண்டியனையும் அவர்தந்தை செழியன் சேந்தனையும் குறாப்பிடுகிறார். களப்பிரரிடமிருந்து தமிழ்நாட்டை மீட்ட கடுங்கோன் பாண்டியனின் பேரனின் மகன் இவர்.இவரது இயற்பெயர் சேந்தன்மாறன் என்றும் அரிகேசரி நெடுமாறன் என்றும் அறியப்படுகிறது. சம்பந்தர் தம் பதிகங்களின் வாயிலாக, 'பஞ்சவன் தென்னன் பாண்டியர்'
'பங்கமில் தென்னன் பாண்டியர்'
'பார்த்திபன் தென்னன் பாண்டியர்' என்றும் இவரை அழைக்கிறார். தமிழோடு தொடர்புடையது பாண்டிய குலம் என்பதனை உணர்த்த 'தமிழ்ப்பாண்டியர்' என்றும் அழைக்கிறார்.
திருவிளையாடற்புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் மட்டுமே இவரை 'கூன்பாண்டியன்' என அழைக்கிறார்.
அகப்பொருள் சிற்றிலக்கியங்களில் காலத்தால் முற்ப்பட்ட 'பாண்டியன்கோவை'யின் பாட்டுடைத்தலைவன் இம்மன்னனே!
இப்பாடல்களின் வாயிலாய் காவிரிக்கு தெற்கே குமரிவரை இவரது நாடு பரவியிருந்ததும் இருபத்தைந்து இடங்களில் இவன் போர்நடத்தி வெற்றி கண்டுள்ளமையும் தெரிய வருகிறது!
பல்லவர், சேரன் முதலியோரை முறையே சங்கைமங்கை,நெல்வேலி ஆகிய இடங்களில் பெருவெற்றி பெருகிறான்.
நெடுமாறன் காலத்தில் வாழ்ந்த சோழமன்னன் பெயர் 'மணிமுடிசோழன்' என அறியமுடிகிறது. சேரனது வஞ்சியோடு சோழனது உறந்தையும் வென்றான் என பாண்டியக்கோவை கூறுகிறது.
புகழ்பெற்ற இம்மன்னனின் கல்வெட்டு ஒன்று மதுரை திருமலைநாயக்கர் மகாலில் உள்ளது. அக்கல்வெட்டின் சிறப்பு கீழேயுள்ள படத்தில் உள்ளது.
No comments:
Post a Comment