Friday, 28 May 2021

ஐஞ்நூற்றுவன்_குளம்

 ஐஞ்நூற்றுவன்_குளம்


பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் சாலையோரத்தில் சுடுகாட்டின் எதிரில் உள்ள பாறைக்கல்லில் ஒரு கல்வெட்டுள்ளது. அஃது


" ஐஞ்நூ

  ற்றுவன் 

  குளம்"


என்று எழுதப்பட்டுள்ளது. இது வணிகக்குழுக் கல்வெட்டாகும். தென்னிந்திய வணிகக் குழுக்களுள் ஒன்றான "ஐயபொழில்" குழுவினரின் கல்வெட்டு இது. ஐயபொழில் குழு "ஐயபொழில் ஐஞ்நூற்றுவர்" என்றும் கூறப்படுவதுண்டு. இவ்வணிகக் குழுவினர் அறக்கொடைகளில் ஒன்று நீர்நிலைகளை அமைத்தல். இக்குழுவைச் சேர்ந்த 'ஐஞ்நூற்றுவன்' என்பவர் பொழிச்சலூரில் ஒரு குளம் தோண்டுவித்து அதற்கு "ஐஞ்நூற்றுவன் குளம்" எனப் பெயரும் பொறித்துள்ளார். இவர் அவ்வணிகக் குழுவைச் சேர்ந்தவர் என்பதற்கு அடையாளமாக இப்பாறையில் வணிகக் குழுவின் சின்னங்களான குத்துவிளக்குகள், கலப்பை, குறுவாள், பசும்பை ஆகியன கல்வெட்டின் இருபுறமும் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்தமைதியை நோக்க இக்கல்வெட்டு கி.பி. 12 - 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருத இடமுள்ளது.


நன்றி:


அன்பு வந்தியத்தேவன் 

கண்ணன் வெங்கடேசன்.




No comments:

Post a Comment