ராஜராஜசோழன் நினைவாய் ஸ்ரீராஜராஜநாடகம் எனும் நாடகமானது பெரியகோவிலில் நடைபெற்றுள்ளது, அதைபோன்றே
"ஸ்ரீராஜராஜவிஜயம்" எனும் ஓர் இலக்கியம் இயற்றப்பட்டு, அக்காலத்தில் திருவிழாநாட்களில் வாசிக்கப்பட்டுள்ளது. இதனை வாசிக்க ஆட்களையும் நியமித்துள்ளனர்.
எழுத்தமைதி வைத்து இக்கல்வெட்டு 11 ம் நூற்றாண்டாய் தெரிகிறது. ராஜராஜர் காலத்திலோ, அல்லது அதற்கடுத்த மன்னர்களாலோ தொடர்ந்து இந்நிகழ்வு நடந்திருக்கவேண்டும். துரதிருஷ்டவசமாய் இக்கல்வெட்டு தரும் தகவல்களை முழுமையாக அறிய இயலவில்லை. இன்று இக்கல்வெட்டு கோபுரத்தின் வெளிப்புற அடித்தளத்தில் மண்மூடி காட்சியளிக்கிறது.
இடம்: திருப்பூந்துருத்தி


No comments:
Post a Comment