Monday, 27 July 2020

நீரிழிவு நோய் தீர்த்த ஈசர்

நீரிழிவு நோய் தீர்த்த ஈசர்:
Title பார்த்து சிரிக்ககூடாது கல்வெட்டில் அப்படிதான் இருக்கு.
மடத்துக்குளம் (பழனியிலிருந்து கோவை செல்லும் NH 209 சாலை) என்னும் ஊரில் இருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள கடத்தூர் என்னும் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ளது இக்கோவில், பெரும்பாலும் சிவாலயங்கள் நீர்நிலையொட்டியே அமைந்திருக்கும், இக்கோவிலும் அமராவதி ஆற்றங்கரையிலேயே அமைந்துள்ளது.
சுமார் 750 வருடம் முன்பு கொங்கு விக்ரமசோழன் ஆட்சியில், திரிபுவனசிங்கன் எனும் அரசியல்தலைவர், "பிரமேகம்" எனும் நோய் நீங்கியதற்காக நிலம்தானம் அளித்துள்ளார்.

(சித்தமருத்துவ குறிப்பின்படி "மேகநோய்" என்றால் சிறுநீரகதொடர்பான நோய்கள் என அறியப்படுகிறது.மேலும் இருபதிற்கும் மேற்ப்பட்ட சிறுநீரக(மேக) நோய்கள் உள்ளதென சித்தமருத்துவ நிகண்டுகள் கூறுகிறது! இதில் பிரமேகம் என்பதனை நீரிழிவு நோய் என சித்தமருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்) மருத்துவர்களால் போக்கமுடியாத நோயினை இறைவன் போக்குவார் என்ற நம்பிக்கை இன்றும் நம்மிடையே உள்ளது.தமிழகத்தில் மருந்தீஸ்வரர் என பெயரிடப்பட்ட சில கோவில்களும் உள்ளது. அப்பரின் குலைநோய் மருத்துவர்களால் நீக்கஇயலாது போய், பின் இறைவன் திருநீர்ரால் நீங்கியதனை இலக்கியத்தில் அறியலாம்.
கல்வெட்டு செய்தி:
கொங்குவிக்ரமசோழனின் ஆட்சியில், திரிபுவனசிங்கனுக்கு "பிரமேகம்"நோய்வந்து கடத்தூர் இறைவன் திருவருளால் நீங்குகிறது, இதனால் இறைவனின் இரவுவழிபாட்டிற்கோ அரிசிதானம் கொடுக்கிறான், இவ்வரிசி தொடர்ந்து கிடைக்க சில நிலங்களை தாரைவார்க்கிறான். இந்நிலம் உதயாதிச்ச சோழதேவன் என்பவன் துரோகியாய் மாறியதால், அவனிடமிருந்து பிடுங்கப்பட்ட அரசாங்க நிலம் ஆகும். இந்நிலத்திற்கான எல்லையும், வரிச்சலுகையும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த எல்லாஉரிமைகளையும் சேர்த்து, அரசின் ஆணைப்படி(திருமுகதிருவிள்ளம்) இறைவனுக்கு கொடுத்துள்ளார்.
மருந்தீஸ்வரர், என்ற கல்வெட்டு பெயர் இன்று மருவி, அர்ச்சுனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும் "தென்திருமணஞ்சேரி" என Extra கதை சேர்க்கப்பட்டு, திருமணத்தடை நீக்கும் தலமாய் மாறிவிட்டது.

No comments:

Post a Comment