Tuesday, 28 July 2020

இந்து-முஸ்லீம் ஒற்றுமையை கூறும் கல்வெட்டு

இந்து-முஸ்லீம் ஒற்றுமையை கூறும் கல்வெட்டு:
நவகிரக பரிகாரதலமான திருநாகேஸ்வரம் கோவிலின் உட்பகுதியில் "குன்று மாமுலையம்மன்" சன்னதி உள்ளது. இச்சன்னதியின் மூலையில் ஓர்பலகைக்கல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்து-முஸ்லீம் மக்கள் ஒருங்கிணைந்து வழிபாடு நடத்திய தகவல் உள்ளது.
சகம்1705(கி.பி.1783) ஐ சேர்ந்த கல்வெட்டு இது. மொத்தம் 39 வரிகளையுடையது.இதில் திருநாகேஸ்வரத்தின் தெற்கு எல்லையான உப்பிலியப்பன் கோவில் முதல், வடக்கு எல்லையான ராவுத்தர்கடை வரை அரைக்காசு வீதம் மகமை வசூலித்து விளக்கெரித்துள்ளனர். இதில் இரண்டு கடைகளின் பணம் பள்ளிவாசலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இக்காரியம் நடைபெறுவதை ஒருவர் கண்காணிக்க வேண்டும்.நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களை முன்னரே கணக்கெடுத்து அவர்களுக்கு மரியாதை செய்யவேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.
இச்செயல்களுக்கு எவறேனும் இடையூறு செய்தால், அவர் இந்துவெனில் "கங்கைக் கரையில் காராம்பசுவை கொன்ற" தண்டனைக்கும், இஸ்லாமியரெனில் "மக்கா நகரில் செய்யக்கூடாததை செய்த தோஷத்திற்கு" ஆளாவார்கள், என்று கூறப்பட்டுள்ளது.
1783 ஐ போல இன்றும் இவ்விரு மதத்தினவரும் இணைந்து விளக்கெரிப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment